அம்பாறை மாவட்ட நல்லிணக்க இப்தார் ! மேலதிக அரசாங்க அதிபர்  பங்கேற்பு.

( வி.ரி. சகாதேவராஜா)  அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின்
 அம்பாறை மாவட்ட கிளை ஏற்பாடு செய்த சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்வு  (9) செவ்வாய்க்கிழமை மாலை சாய்ந்தமருது சீப்ரீஸ் விடுதியில் நடைபெற்றது .
மாவட்ட குழு தலைவர் மௌலவி ஐ எல் எம் ஹாசிம் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் சிறப்பு அதிதியாக பங்கேற்றார்.
 இஸ்லாமிய இந்து கிறிஸ்தவ மத பெரியார்கள் மத பிரமுகர்கள் சமூக சேவையாளர்கள் கல்வி வியியலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.
 உப தலைவர் விரிவுரையாளர் மௌலவி எஃப் .எம். அன்சார் மௌலானா நன்றியுரையாற்றினார்.
 செயலாளர்  விரிவுரையாளர் மௌலவி நாசிர்கனி நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.
 மதத் தலைவர்களின் உரைகளை அடுத்து நோன்புதிறக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
 இறுதியில் இந்து கிறிஸ்தவ சகோதரர்களுக்கு பேரிச்சம்பழ பொதிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.