மட்டக்களப்பு மாவட்டத்துக்கு எஸ். வியாலேந்திரன்.யாழ். மாவட்டத்துக்கு அங்கஜன் ராமநாதன்மாவட்ட இணைப்புக் குழு தலைவர் பதவிகள்

அரசாங்க தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் 17 பேருக்கு மாவட்ட இணைப்புக் குழு தலைவர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி செயலகத்தில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவினால் இந்த நியமனங்கள் இன்று (27) வழங்கப்பட்டன.

இந்தவகையில் வழங்கப்பட்ட பொறுப்புக்கள் வருமாறு,

  • கொழும்பு மாவட்டத்துக்கு விஜேதாச ராஜபக்ஸ
  • கம்பஹா மாவட்டத்துக்கு சுதர்சனி பெர்ணாந்து புள்ளே
  • களுத்துறை மாவட்டத்துக்கு பியல் நிசாந்த
  • கண்டி மாவட்டத்துக்கு கலாநிதி சரத் அமுனுகம
  • மாத்தளை மாவட்டத்துக்கு லக்ஸ்மன் வசந்த பெரேரா
  • மொனராகலை மாவட்டத்துக்கு சுமேதா பீ. ஜயசேன
  • நுவரெலியா மாவட்டத்துக்கு முத்து சிவலிங்கம்
  • காலி மாவட்டத்துக்கு சந்திம வீரக்கொடி
  • மாத்தறை மாவட்டத்துக்கு நிரோசன் பிரேமரத்ன
  • யாழ். மாவட்டத்துக்கு அங்கஜன் ராமநாதன்
  • மன்னார் மாவட்டத்துக்கு காதர் மஸ்தான்
  • மட்டக்களப்பு மாவட்டத்துக்கு எஸ். வியாலேந்திரன்
  • அம்பாறை மாவட்டத்துக்கு சிறியானி விஜேவிக்ரம
  • அனுராதபுர மாவட்டத்துக்கு வீரகுமார திஸாநாயக்க
  • பதுளை மாவட்டத்துக்கு தேனுக விதானகமகே
  • கேகாலை மாவட்டத்துக்கு சாரதீ துஸ்மன்த மித்ரபால
  • இரத்தினபுரி மாவட்டத்துக்கு துனேஸ் கன்கந்த ஆகியோரே இவ்வாறு நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.