செங்கலடி இலங்கை வங்கி கிளை புதிய இடத்தில்

(ஏறாவூர் நிருபர் நாஸர்)

இலங்கை வங்கியின் செங்கலடி கிளை புதிய இடத்திற்கு மாற்றும் நிகழ்வு சம்பிரதாயபூர்வமாக நடைபெற்றது.

வங்கியின் கிழக்கு மாகாண உதவிப் பொது முகாமையாளர் டபிளியு.எம்.ஏ. வணிகசேகர இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

கிளை முகாமையாளர் எஸ். சன்முகபிரதாப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் கே. தனபால சுந்தரம், பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி ஏஎம்ஏ. நஜீப் மற்றும் வங்கியின் உயரதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

சம்பிரதாயபூர்வமாக வாடிக்கையாளருடன் பண பரிமாற்றம் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டு கடன் திட்ட ஆரம்பம் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன.

செங்கலடி வங்கிக்கிளை கடந்த பல வருடகாலமாக பற்றாக்குறையான ஓரிடத்தில் இயங்கிவந்தது. தற்போது விசாளமான கட்டத்தில் டிஜிடல் மயப்படுத்தப்பட்ட நிலையில் இயங்குகிறது.