பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களைப் பொறுப்பேற்கும் பணிகள், மார்ச் 05முதல் ஆரம்பமாகியுள்ளன. குறித்த விண்ணப்பங்கள், மார்ச் 26 ஆம் திகதி வரை பொறுப்பேற்கப்படுமென, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
விண்ணப்பங்களை ஒன்லைன் மூலமாகவும் சமர்ப்பிக்க முடியுமென, ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
2019 / 2020 பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களைப் பொறுப்பேற்கும் பணிகளே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயலாளர் பிரியந்த பிரேம குமார தெரிவித்துள்ளார்.