மட்டக்களப்பில் அமெரிக்க தூதுவர்.

(எருவில் துசி) மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் UNDP நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட பெண்களுக்கான வன்முறை மற்றும் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு கண்காட்சியில் அமெரிக்க தூதுவர் பங்கு பற்றி பெண்களின் நலன் சார்ந்த விடயங்களில் தற்போதைய முன்னேற்றம் தொடர்பாக மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

நிகழ்வில் UNDPயின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி மற்றும் உள்ளூராட்சி அணையாளர், மாவட்ட அரசாங்க அதிபர், உள்ளூராட்சி உதவி ஆணையாளர்,செயலாளர்கள் உத்தியோகத்தர்கள் மற்றும் பெண்கள் சார் அமைப்புக்களின் ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டமையும் குறிக்பிடத்தக்கது.