கிண்ணியா மயில்தீவு பிரதான வீதி பாலத்தை புனரமைக்குமாறு கோரிக்கை

(ஏ.ஆர்.எம்.றிபாஸ் கிண்ணியா நிருபர்)

கிண்ணியா பிரதேச சபை எல்லைக்குட்பட்ட காக்காமுனை கிராம சேவகர் பிரிவிலுள்ள மயில்தீவு பிரதான வீதியிலுள்ள பாலம் பல மாதங்களாக உடைத்து சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது

இப்பாலமானது உடைந்து பல மாதங்கள் கடந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கவலை தெரிவிக்கின்றனர்

இவ்வீதியூடாக தினமும் பிரயாணம் செய்கின்ற பாடசாலை மாணவர்கள் , வியாபாரிகள், வயோதிபர்கள், பெண்கள் ஆகியோர் சிரமப்படுவதாக தெரிவிக் கின்றனர்

அதிகமாக இவ்வீதியை விவசாயிகள் பயன்படுத்துவதால் இயந்திரங்கள், உழவு இயந்திரங்களை, விதைகளை எடுத்து செல்வதில் சிரமங்களுக்கு உள்ளாகுவதாக கவலை தெரிவிக்கின்றனர்

இப்பாதையானது காக்காமுனை மயில்தீவு ஊடாக சூரங்கல், மணியரசன்குளம் , கற்குழி , வட்டமடு , தம்பலகாமம் , முள்ளிப்பொத்தானை, கந்தளாய் போன்ற பிரதேசங்களுக்கு செல்லும் பிரதான பாதையாக காணப்படுகிறது

இதனை புனர்நிமாணம் செய்துதருமாறு அதிகாரிகளிடம் கோரியும் எந்த பயனும்  கிட்டவில்லையென கவலை தெரிவிக்கின்றனர்

எனவே இவ்வீதியில் உடைந்து கிடக்கும் பாலத்தை புனரமைத்துத் தருமாறு உரிய அதிகாரியினரிடம் பிரதேச மக்கள் கோருகின்றனர்