அரசாங்கத்தை அகற்றுவோம் பணிபகிஸ்கரிப்பு.

அரசாங்கத்தை அகற்றுவோம்’ என்ற தொனிப்பொருளில் அனைத்து அரச,  அரசுசாரா மற்றும் தனியார் துறைகள் இணைந்து பாரிய வேலை நிறுத்தமொன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தின் தலைவர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் திறமையற்ற ஆட்சி மற்றும் மக்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராக எதிர்வரும் 8ஆம் திகதி இந்த பாரிய பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தை நாடளாவிய ரீதியில் அனைத்து ஊழியர்களும் முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.