அன்னையர் தினத்தில் குழந்தையை நாய்க்கு இரையாக்கிய பெண்

மட்டக்களப்பு வெல்லாவெளி பகுதியில் சம்பவம்

(தாமோதரம் சுதாகரன்)

மட்டக்களப்புவெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனைகட்டியவெளி சமிளயடிவட்டை,கம்பியிறக்கம் பகுதியில்  கல் உற்பத்திசெய்யும் பிரதேசத்தில் நேற்றையதினம் மாலை 6 மணியளவில் கல்லுவாடியில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவர் நாய் ஒன்று இறந்த சிசுவின் உடலை இழுத்துச் செல்வதை கண்டு கிராம உத்தியோகத்தருக்கு தகவல் வழங்கியதையடுத்து சிசுவின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

இறந்த சிசு தொடர்பில் அந்த பகுதியை சேர்ந்த 40வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவரை வெல்லாவெளி பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

.இதனை தொடர்ந்து தொடர்ந்து மேலதிக விசாரணைகளுக்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. குறித்த சிசுவின் மரணம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.