உடன்பாட்டை எட்டியதில் மகிழ்ச்சி – IMF தலைவர்!

நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு ஆதரவளிப்பதற்காக ஊழியர்கள் மட்ட உடன்பாட்டை எட்டியதில் மகிழ்ச்சியடைவதாக சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கமும் சர்வதேச நாணய நிதியமும் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை 48 மாத விரிவாக்க நிதி வசதிக்கான உடன்படிக்கையை அண்மையில் எட்டியது.

குறித்த ஊழியர்மட்ட உடன்படிக்கையானது இலங்கைக்கு ஒரு முக்கியமான முன்னேற்றம் என சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா கூறியுள்ளார்.