சுதந்திர கிண்ணத்தை கைப்பற்றியது வடக்கு மாகாணம் !

(அஸ்ஹர் இப்றாஹிம்)

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் நடாத்திய மாகாணங்ளுக்கு இடையிலான சுதந்திர கிண்ண உதைபந்தாட்ட போட்டியின் இறுதிப்போட்டி இன்றையதினம் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றது.

இறுதிப்போட்டியில் வடக்கு மாகாண அணியும் தெற்கு மாகாண அணியும் பலப்பரீட்சை நடாத்தியிருந்தனர்.

குறித்த போட்டியில் 03.01 என்ற கோள்களின் அடிப்படையில் வடக்கு மாகாண அணி மகுடம் சூடியுள்ளது.