சஹ்ரான் ஹாசீமின் படங்களை வைத்திருந்தவர் உட்பட 9 பேர் விசாரணையின் பின்னர் விடுதலை

வாழைச்சேனையில் வேன் ஒன்றில் பிரயாணித்த ஒருவர் கையடக்க தொலைபேசியில் சஹ்ரான் ஹாசீமின் படங்களை வைத்திருந்ததை அடுத்து 9 பேர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு கொழும்பு வீதியில் உள்ள ரிதிதென்னை பொலிஸ் சோதனைச் சாவடியில் சனிக்கிழமை காலை அக்குரனையில் இருந்து காத்தான்குடி நோக்கி பயணித்த வாகனம் ஒன்றை நிறுத்தி இராணுவத்தினர் சோதனையிட்டனர்.

இதன்போதே, முகமட்பாரூக் முகமட் ஆசாத் என்பவர் தனது கையடக்க தொலைபேசியில் தடுப்பூசி ஏற்றியதற்கான அட்டையின் படத்தை காட்ட முற்பட்டபோது, ஜ.எஸ்.ஜ.எஸ். பயங்கரவாதியான சஹ்ரான் ஹாசீமின் படங்களை வைத்திருந்தமை தெரியவந்துள்ளது.

வாழைச்சேனையில் வேன் ஒன்றில் பிரயாணித்த ஒருவரின் கையடக்க தொலைபேசியில் சஹ்ரான் ஹாசீமின் படங்கள் காணப்பட்டதையடுத்து, தடுத்து வைக்கப்பட்ட 9 பேரும் விசாரணையின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.