காரைதீவு விபுலாநந்தா நற்சேவை ஒன்றியத்தினர் (க.பொ.த.(சா.த.)1988 & க.பொ.த. (உ.த) 1991 அணியினர்) காரைதீவிலுள்ள பாடசாலைகளுக்கு கொரோனாத்தடுப்பு காலால் இயக்கப்படும் கைகழுவும் சாதனங்களை அன்பளிப்புச்செய்துவைத்தனர். ஒன்றியத்தலைவர் எல்.லோகேந்திரகுமார் தலைமையில் காரைதீவு பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன் முன்னிலையில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் அதிபர்களுக்கு ஒன்றியநிருவாகிகள் 13 சாதனங்களை வழங்கிவைப்பதைக் காணலாம்.