பன்சேனையில் இல்ல விளையாட்டு

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பன்சேனை பாரி வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியானது 2024.05.02ம் திகதி வித்தியாலயத்தின் முதல்வர் தே.பவளசிங்கம்தலைமையில் நடைபெற்றது.

இதன்போது அதிதிகள் மலர்மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டத்துடன்,மங்கல விளக்கு ஏற்றல், தேசியக் கொடி ஏற்றல், ஒலிம்பிக் தீபம் ஏற்றல், விளையாட்டுக்கள், அதிதிகள் உரைகள்,பரிசில்கள் வழங்கல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதன் போது வெற்றியீட்டிய மாணவர்களுக்கு சான்றிதழ்களும், சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு வெற்றிக்கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பிரதம விருத்தினராக மட்டகளப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் யோ. ஜெயச்சந்திரன், ஆன்மீக அதிதியாக தாந்தாமலை ஸ்ரீமுருகன் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ நவரூபன் ஐயா, விசேட அதிதியாக பிரதிக் கல்விப் பணிப்பாளர்(நிருவாகம் )செ. மகேந்திரகுமார்,சிறப்பு அதிதிகளாக வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான யோ. சா. சஜீவன் (திட்டமிடல் பிரிவு ),ந. குகதா

சன் (கல்வி அபிவிருத்தி ), த. யசோதரன்(முகாமைத்துவம் ), க. ரகுகரன் (கோட்டக் கல்விப் பணிப்பாளர் -மண்முனை மேற்கு )ஆகியோர்களும் கலந்து கொண்டனர்.