ரணில் பிரதமராக பதவியேற்றப் பின்னர் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று!

அமைச்சரவைக் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளது.

ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்ற பின்னர் நடைபெறும் முதலாவது அமைச்சரவை கூட்டம் இதுவாகும்.

எவ்வாறாயினும், ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்ட நான்கு அமைச்சர்களுக்கும் இடையில் நேற்று கலந்துரையாடல் ஏற்கனவே இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.