வற்றும் சிறிய குளங்கள் : கால்நடைகள் நீரிற்கு நீண்ட தூரம் அலையும் நிலை

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகம் வெப்பம் காரணமாக சிறுசிறு குளங்களில் நீர் வற்று ஏற்பட்டுள்ளது. இதனால் கால்நடைகள் பெரிய குளங்களை தேடி நாடவேண்டிய நிலையேற்பட்டுள்ளது. சிறுகுளங்களை நம்பி பயிர்செய்கைகளில் ஈடுபட்டவர்ளும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதுடன், நீரின்றி பயிர்களும் கருகும் நிலையேற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நீண்ட நாட்களாக மாவட்டத்தில் மழை பெய்யாமையின் காரணமாகவே இந்நிலையேற்பட்டுள்ளது.supeedsam Epaper 30.04