ஓட்டோவில் இருவர் மாத்திரமே பயணிக்க அனுமதி

ஓட்டோ பயணத்தின்போது இரண்டு பயணிகளை மாத்திரமே ஏற்றிச் செல்ல, அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கான அறிவிப்பு சகல பொலிஸ் நிலையங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஊரடங்கு தளர்த்தப்படினும் பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் மக்களின் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.