தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி  வேட்பாளர்கள் அறிமுகம்.

நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் அவர்களைத் தலைiயாகக் கொண்ட தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி சார்பில் மட்டக்களப்பில் களமிறங்கவுள்ள வேட்பாளர்களில் பிரதான இரு வேட்பாளர்கள் இன்று அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். அந்தவகையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சே.ஜெயானந்தமூர்த்தி மற்றும் விஜயவதி முரளிதரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய தினம் (08) மட்டக்களப்பில் இடம்பெற்ற அக்கட்சியின் மத்திய குழுவிலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய குழுக் கூட்டத்தின் முடிவில் விநாயகமூர்த்தி முரளிதரன் அவர்கள் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,

எதிர்வரும் தேர்தலில் தமழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கிழக்குமாகாணம் மற்றும் வடக்கில் வன்னித் தேர்தல் மாவட்டத்தில் களமிறங்கத் தீர்மானித்துள்ளது. கிழக்கு மாகாணத்தில் அனைவரும் ஒன்றிணைந்து இத்தேர்தலை எதிர்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. தேசியக் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன. குறிப்பாக பொதுஜன பெரமுன கட்சி அதனுடன் இணைந்து தேர்தலில் களமிறங்க எம்மிடம் கேட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தைப் பொருத்த வரையில் முஸ்லீம் வேட்பாளர் எவரையும் நியமிக்காவிட்டால் அக்கட்சியுடன் இணைந்து தேர்தலில் ஈடுபட முடியும் என ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளோம். அடுத்த எதிர்வரும் நாட்களில் எமது மத்திய குழு மீண்டும் கூடும். அதிலே தான் எமது இறுதி முடிவினை அறிவிப்போம். தற்போதைக்கு எமது கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்துக்குரிய பிரதான வேட்பாளர்களாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சே.ஜெயானந்தமூர்த்தி மற்றும் விஜயவதி முரளிதரன் ஆகியோர் எமது மத்திய குழுவினால் தெரிவு செய்யப்பட்டிக்கின்றார்கள். அம்பாறை மாவட்டத்தில் வேட்பாளர் தெரிவுகள் மேற்கொள்ளப்படவில்லை. நான் அங்கு போட்டியிடுவதற்குத் தீர்மானித்துள்ளேன். திருகோணமலை மாவட்டத்திலும் வேட்பாளர் தெரிவு விடயங்கள் மேறகொள்ளப்பட்டு வருகின்றன. வன்னி மாவட்டத்தில் முன்னாள் போராளிகள் மற்றும் அவர்களின் உறவுகள் என்ற ரீதியில் எமது வேட்பாளர் தெரிவுகள் இடம்பெறும்.

எமது தெரிவுகள் ஒவ்வொன்றும் போhளிகளை அல்லது போராளிகள் குடும்பங்களை மையப்படுத்தியதாக இருக்கும். இன்று தமிழ்த் தேசியம் பேசும் கட்சிகள் போராளிகளைப் புறந்தள்ளி இருக்கின்றார்கள். அவர்கள் ஒரு போராளியைக் கூட வேட்புமனுவில் உள்வாங்குவதற்கு முயற்சியெடுக்கவில்லை. எனவே எமது போராளிகளின் துன்ப துயரங்களை நீக்குவதற்காக அவர்கள் மத்தியில் இருந்து வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதே எமது நோக்கம்.

கிழக்கு மாகாணத்திலே பிரிவுகள் எற்படுவதற்கு நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் பிரிந்து நின்றால் அது வேறு சக்திகளுக்குத் தான் வாய்ப்பாக அமையும். எனவே ஒற்றுமைக்காகப் பல விட்டுக் கொடுப்புகளை மேறகொள்ளவும் நாங்கள் தயராக இருக்கின்றோம். அந்த அடிப்டையில் தான் ஆனந்தசங்கரியுடன் பல பேச்சுவார்த்கைளை நடத்தினோம். ஆனால் எவ்வித ஒப்பந்தங்களையும் மேற்கொள்ளவில்லை. ஆனால் ஆனந்தசங்கரி அவர்களின் கருத்துக்கள், செயற்பாடுகளின் காரணாக அதனை தொடர்ந்து மேற்கொள்ள முடியவில்லை. அவர் சில விட்டுக் கொடுப்புகளுடன் முன்வந்தால் அதனுடன் இணைந்து போவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களுக்கு எதுவித சேவையும் செய்யவில்லை, எந்த உரிமையையும் காப்பாற்றவில்லை. மாறாக நிலங்களை நாங்கள் பறிகொடுத்துள்ளோம். அதற்காக அவர்கள் குரல் கொடுக்கவும் இல்லை. எல்லைப்புற மக்களை அவர்கள் கணக்கில் எடுப்பதும் இல்லை. மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொருத்தவரையில் எதுவித பிரயோசனமும் இல்லாத கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களால் பார்க்கப்படுகின்றது. தற்போது வேட்பாளர் தெரிவில் கூட பல துரோகங்களைச் செய்தவர்களையெல்லாம் தங்கள் கட்சியில் நிறுத்தியிருக்கின்றார்கள். இவ்வாறானவர்களை நிறுத்திக் கொண்டு எவ்வாறு தமிழ்த் தேசியம் பேச முடியும். அந்தளவிற்கு வேட்பாளர் பற்றாக்குறை நிலவுகின்ற ஒரு கட்சியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாற்றமடைந்திருக்கின்றது. எனவே தேசியம் தேசியம் என்று பேசிக்கொண்டு மக்களை இன்னமும் ஏமாற்றக் கொண்டிருப்பதை தமழ் மக்கள் உணர்ந்து கொண்டு தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் பின்னால் அணி திரள வேண்டும் என்று தெரிவித்தார்.