மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலயத்தின் சிறுவர் இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் இன்று(20) வியாழக்கிழமை நடைபெற்றன.
முனைக்காடு இராமகிருஷ்ண விளையாட்டு கழக மைதானத்தில் பாடசாலையின் அதிபர் மா. சத்தியநாயகம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், ஒலிம்பிக் தீபம் ஏற்றல், அணிநடை மரியாதை, செயற்பட்டு மகிழ்வோம் போன்ற நிகழ்ச்சிகளும், போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கும், கலந்து கொண்ட மாணவர்களுக்கும் பரிசில்களும், பதக்கங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் செயலாளர் பூ. பிரசாந்தன், வலயக்கல்விப் பணிப்பாளர் சி. சிறீதரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.