E.P.R.L.Fகட்சியூடான செயற்பாடுகளில் இருந்து விலகினார் துரைரத்தினம்

சுரேஸ் பிறேமச்சந்திரன் தலைவர் (E.P.L.R.F) தலைமையிலான செயற்பாட்டிற்கும் முன்னால் மாகாணசபை உறுப்பினருமான இரா.துரைரெத்தினமான எனக்கும் உள்ள செயற்பாடுகளை எனது தனிப்பட்ட நலன் கருதி நிறுத்தி உள்ளதாக முன்னாள் கிழக்கு மாகாணசபை சிரேஸ்டஉறுப்பினரும், மு.ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முக்கியஸ்தருமான இரா.துரைரெத்தினம் தெரிவித்துள்ளார்.

கடசியின் பெயரை மாற்றம் செய்து புதுத் தலைமையை வடக்கில் உருவாக்கு வதற்கு முழு ஓத்துழைப்பை வழங்கியவன் என்ற அடிப்படையில் கிழக்கில் வாக்குகள் பிரிபடக் கூடாது என்பதற்காக கடந்த காலத்தில் மாகாணசபை, பாராளுமன்றம் தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து செயற்பட்டவன் என்ற விடயத்தில் எதிர்காலத்திலும் பாராளுமன்றம், மாகாணசபை உள்ளூராட்சி தேர்தல்களிலும், ஏனைய பொதுவான விடயங்களிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பங்கு தாரர்களாக என்னையும் ஒரு குழுவாக இணைத்துக் கொள்ளுமாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் கோரியுள்ளேன்.

இவ்விடயம் தொடர்பாக கடந்த காலத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட்டவன் என்ற வகையில் எதிர் வரும் பாராளுமன்றத் தேர்தலில் இணைந்து செயற்பட விரும்பி உள்ளதோடு இம் முடிவிற்கும் சுரேஸ் பிறேமச்சந்திரான தலைமைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இம் முடிவுகளும் எனது தனிப்பட்ட முடிவுகளே.

35 வருடங்களுக்கு மேலாக எல்லோருடனும் பொதுவாகவும், தனிப்பட்ட ரீதியாகவும் நன்றாகப் பழகியவன் என்ற அடிப்படையில் எனக்கும் கட்சியில் உள்ளோருக்கும் எவ்வித தனிப்பட்ட முரண்பாடுகளும் இல்லை என்பதோடு அனைவரும் சிறப்பானவர்கள் எனது தனிப்பட்ட உறவு அனைவருடனும் இருக்கும் எனத் தெரிவித்தார்.