லக்ஸ்டோ மீடியா நெட்வேர்க், தமிழ் எழுத்தாளர் சங்கம் இணைந்து நடாத்திய திறமைக்கான விருது வழங்கும் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தினைச் சேர்ந்த 25பேருக்கு திறமைக்கான விருது அண்மையில் வழங்கி வைக்கப்பட்டது.
ஆரையூர் அருள் உள்ளிட்ட மண்முனை தென்மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட 25பேருக்கே, கிழக்கு சீமையிலே எனும் தொனிப்பொருளில் கல்முனையில் நடந்த திறமைக்கான விருது வழங்கும் நிகழ்வில் வழங்கப்பட்டது.
கூத்து கலைஞ்சர்கள், சமூக சேவையாளர்களுக்கே இவ்விருதுகள் வழங்கி வைக்கப்படடன.