இரண்டு யானைகள் உயிரிழப்பு

திருகோணமலை மாவட்டத்தில் இன்று இரு பிரதேசங்களில் இரண்டு யானைகள் உயிரிழதுள்ளதாக அப்பிரதேச வாசிகள் தெரிவித்தனர்.

 

மெரவெவ காட்டுப்பகுதியில் ஒரு யானையும் மூதுர் ஷாபி நகர் வயல் பிரதேசத்தில் ஒரு யானையுமாக இறந்த நிலையில் காணப்பட்டதாக அப்பிரதேச வாசிகள் தெரிவித்தனர் .

மூதூர் ஷாபி நகர் பிரதேசத்தில் இறந்த யானைக்கு ஒரு வயது மதிக்கத்தக்க குட்டியும் அதன் அருகில் காணப்படுவதாகவும் அப்பிரதேச வாசிகள் தெரிவித்தனர்.