அரசடித்தீவில் ஆக்கத்திறன் கண்காட்சி

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட அரசடித்தீவு விக்னேஸ்வரா பாலர் பாடசாலையின் ஆக்கத்திறன் கண்காட்சி இன்று(11) திங்கட்கிழமை நடைபெற்றது.

இதன் போது, பாலர் பாடசாலை மாணவர்களின் ஆக்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

பாடசாலையின் தலைவர் அ.கருணாகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மண்முனை தென்மேற்;கு பிரதேச சபை தவிசாளர் சி.புஸ்பலிங்கம், முன்பள்ளி உதவிக்கல்விப் பணிப்பாளர் எஸ்.கணேஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு கண்காட்சியை பார்வையிட்டனர்.