மகிழடித்தீவு நாட்டார் பாடல் தேசியமட்டத்தில் 3ம் இடம்

— படுவான் பாலகன் —

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மகிழடித்தீவு சரஸ்வதி வித்தியாலய மாணவர்களினால் ஆற்றுகைசெய்யப்பட்ட நாட்டார்பாடல் தேசியமட்ட தமிழ்மொழித்தின போட்டியில் மூன்றாம் இடத்தினைப் பெற்றுள்ளது.

இப்போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கும், ஆலோசனை, நெறிப்படுத்தல்களை செய்த அதிபருக்கும், பழக்கிய ஆசிரியர்களுக்கும் பாடசாலை சமுகத்தினர் நன்றிகளைத் தெரிவித்தனர்.