முனைப்பு ஸ்ரீலங்கா’வின் சமூக நலத்திட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமை நிலையில் மக்களுக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காகவும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காகவும், “முனைப்பு ஸ்ரீலங்கா” அமைப்பின் ஏற்பாட்டில், பல்வேறு சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

அதன்கீழ், பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மகிழடித்தீவிலுள்ள  குடும்பமொன்றுக்கு வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக 50 கோழிகள் வழங்கப்பட்டன.

குறித்த குடும்பத்தின் வறுமை நிலையைக் கருத்தில்கொண்டு, இந்த உதவி வழங்கப்பட்டதாக, முனைப்பு ஸ்ரீலங்காவின் தலைவர் மாணிக்கப்போடி சசிகுமார் தெரிவித்தார்.முனைப்பு ஸ்ரீலங்கா’வின் சமூக நலத்திட்டம்