கல்முனை வடக்கு தமிழர்களது பூர்வீக அடையாளமாக இருக்கிறது

பா.அரியநேத்திரன்,மு.பா.உ

கல்முனையை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தாமல் தடுப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஐனாப் ஹரீஷ் கூறுவது போன்று போன்று கல்முனை அவருடைய வாப்பா வீட்டு சொத்தல்ல.
இவ்வாறு தெரிவித்தார் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்
ஊடகங்களுக்கு விடுக்கப்பட்ட விஷேட அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
கல்முனை வடக்கு தமிழர்களது பூர்வீக அடையாளமாக இருக்கிறது. அதனை அழித்து அவர்களுடைய தேவைக்கேற்ப சுரண்டுவதை அனுமதிக்க முடியாது.
முஷ்லிம் தரப்பினர் கேட்கின்ற நியாயமான எல்லையை பரிசீலிக்கலாம்.ஆனால் தமிழ் சமூகத்தின் ஆள்புல எல்லைகள் மிகவும் துல்லியமாக வரையறுக்கப்பட்டாக வேண்டும். அவ்வாறு நடைபெறாமல் அரசை பயம்காட்டி நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வந்து காரியம் சாதிக்க நினைப்பது ஹரீஷ் பாராளுமன்ற உறுப்பினரின் மடமைத்தனமாகும்.
தமிழ்தேசிய கூட்டமைப்பின் சேலையின் ஊசி மருந்தால்தான் இந்த அரசாங்கம் இன்னும் பயணிக்கிறது. நாம் சேலையின் பாச்சாவிட்டால் ரணில் அரசு நடுவீதியில் இந்த அரசாங்கம் வரும் என்பதை சகலரும் உணர வேண்டும் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பிரதமர் ரணிலுடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு நேற்று 08/07/2019, நடத்திய சந்திப்பில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்காக தனியான கணக்காளர் தனியான வங்கிக்கணக்கு திறப்பதற்கான நடவடிக்கை உடனடியாக இடம்பெறும் என பிரதமர் வாக்குறுதி வழங்கியுள்ளார்.
அப்படியான விடயம் இடம்பெறாவிட்டால் தமிழ்தேசிய கூட்டமைப்பு எதிர்வரும் 11/07/2019, வாக்கெடுப்பில் எப்படி நடந்து கொள்ளும் என்பது பிரதமருக்கு நன்கு தெரியும் எனவும் மேலும் கூறினார்.