யாழ்.பாதயாத்திரிகர்களுக்கு காரைதீவில் பெருவரவேற்பு!

காரைதீவு  நிருபர் சகா

கடந்த மே மாதம் 10ஆம் திகதி புறப்பட்ட யாழ். கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு நேற்றுமுன்தினம்(15)சனிக்கிழமை காரைதீவில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. வேல்சாமி தலைமையிலான பாதயாத்திரைச்சங்கத்தினர் வரவேற்பளிக்க அதன் பொருளாளர் எஸ்.தேவதாஸின் வீட்டில் நீராகாரம் வழங்கப்பட்டது.

 
காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கி.ஜெயசிறில் அடியார்களை வரவேற்றார்.
கடந்த 35நாட்களாக யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு திருகோணமலை மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களைக்கடந்து நேற்றுமுன்தினம் அம்பாறை மாவட்டத்திலுள்ள காரைதீவை வந்தடைந்தார்கள். ஸ்ரீ கண்ணகை அம்மனாயலத்தில் இரவு தங்கினார்கள்.

நேற்று(16) அவர்களுக்காக ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி ஆலயத்தில் காலைப்பூஜையும் நந்தவனசித்திவிநாயகர் ஆலயத்தில் பகல்பூஜையும் நடைபெற்றது. 
 
மாவடி கந்தசுவாமி ஆலயத்தில் இரவுப்பூஜையும் இடம்பெறஏற்பாடாகியிருந்தது.
நேற்று பகல் நந்தவனசித்திவிநாயகர் ஆலயத்தில் அடியார்களுக்கு உலருணவு வழங்கலும் லண்டன்.அடியார் யாழ்.மணிவாசகர் வழங்கிய உதவியை பகிர்ந்தளித்தலும் பிரதேசசெயலாளர் சிவ.ஜெகராஜன் முன்னிலையில் நடைபெற்றது