பெயர் பதாதைகள் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் மாத்திரமே இருக்க வேண்டும்

இலங்கையில் காட்சிப்படுத்தப்படும் பெயர் பதாதைகள் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் மாத்திரமே இருக்க வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தனவுக்கு பணிப்புரை வழங்கியிருக்கின்றார்.

இந்த மூன்று மொழிகளும் தவிர்ந்த வேறு மொழிகளை பயன்படுத்தக் கூடாது என்றும் பிரதமர் உத்தரவிட்டிருக்கின்றார்.