Batticaloa Campus’ தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க கோப் குழு தீர்மானம்

‘Batticaloa Campus’ எனும் பெயரில் மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்படும் பல்கலைக்கழகம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு பொது முயற்சியாண்மைக்கான தெரிவுக்குழு எனப்படும் கோப் குழு தீர்மானித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக எதிர்வரும் 21ஆம் திகதி கோப் குழு கூடவுள்ளதாக, குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த பல்கலைக்கழகத்தை அரசாங்கத்தின் கீழ் கொண்டுவருவது தொடர்பிலான அறிக்கையை அடுத்த மாதம் முதல் வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக, பாராளுமன்ற துறைசார் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, ‘Batticaloa Campus’ எனும் பெயரில் மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்படும் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி செயற்பாடுகளை முன்னெடுப்பது குறித்து பாராளுமன்ற துறைசார் கண்காணிப்புக் குழு தீர்மானிக்கும் என, பேராசிரியர் ஆசு மாரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.