முனைக்காடு வீரபத்திரர் ஆலயத்தில் அடிக்கல் நாட்டி வைப்பு

மண்முனை தென்மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட முனைக்காடு வீரபத்திரர் ஆலயத்தில் மடம் அமைப்பதற்கான அடிக்கல் இன்று(29) நாட்டிவைக்கப்பட்டது.

கம்பரெலிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ், ஐந்து இலட்சம் ரூபாய் செலவில் இம்மடம் அமைக்கப்படவுள்ளது.
இதற்கான அடிக்கல்லினை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் சி.புஸ்பலிங்கம் உள்ளிட்டோர் நட்டனர்.