பாதுகாப்புக் கருதி பொலிஸாரால் குடும்ப விவரங்கள் சேகரிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையைக் கருத்திற் கொண்டு ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைவாக அந்தந்தப் பொலிஸ் பிரிவுகளில் வசிக்கும் குடும்பங்களிலுள்ள அங்கத்தவர்களின் விவரங்களைச் சமர்ப்பிக்குமாறு பொலிஸாரால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

 

பொலிஸாரால் விநியோகிக்கப்படும் குடும்பத் தகவல் திரட்டுப் படிவங்களுக்கமைவாக ஒவ்வொரு குடும்பமும் தத்தமது விவரங்களை வெகு விரைவாகச் சமர்ப்பிக்க வேண்டும் என்று பொலிஸார் கேட்டுள்ளனர்.

பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல்களின் ஒலிபெருக்கிகளினூடாகவும் இந்த அறிவித்தல்கள் அவ்வப்போது விடுக்கப்படுகின்றன.

பொலிஸார் விநியோகித்துள்ள குடும்ப விவர சேகரிப்பு படிவத்தில் குடும்பத்திலுள்ள ஒவ்வொரு அங்கத்தவரினதும் விவரங்கள் கோரப்பட்டுள்ளன.