இலங்கையில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல்?

தலைநகர் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் 8 இடங்களில் தற்கொலை குண்டுத்தாக்குதல்களை நடத்திய தேசிய தெளஹீத் ஜமா அத்  அமைப்பு இரண்டாவது தாக்குதல் ஒன்றினை நடத்த திட்டமிட்டுள்ளதாக இந்திய உளவுத்துறை இலங்கை அதிகாரிகளை எச்சரித்துள்ளது.

 

இரண்டாம் கட்ட தாக்குதல் ஒன்றுக்கு அந்த அமைப்பு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் வழி நடத்தலில் தயாராவதாகவும்,  தககுதலின் இலக்கு உள்ளிட்ட விடயங்களை வெளிப்படுத்த உளவு மற்றும் தொழில் நுட்ப உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக இந்தியா இலங்கையின் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையும் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.