பஸ் கட்டணம் அதிகரிக்கப்படும் சாத்தியம்?

எரிபொருள் விலைச்சூத்திரத்திற்கு அமைய எதிர்வரும் 10 ஆம் திகதி டீசலின் விலை 4ரூபாவால் அதிகரிக்கப்படும் பட்சத்தில், பஸ் கட்டணம் அதிகரிக்கப்படும் என, அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போதுள்ள குறைந்தபட்ச கட்டணமான 12 ரூபாவில் மாற்றம் மேற்கொள்ளப்பட மாட்டாது என,  அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்தார்.

இன்று (03) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.