பிரபல இந்திய எழுத்தாளர் வித்யாசாகர் சம்மாந்துறையில்

பிரபல தென்இந்திய பன்முக எழுத்தாளர் பாடலாசிரியர் கவிஞர் வித்யாசாகர்  சனிக்கிழமை(09) சம்மாந்துறையில்இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற  தமிழா ஊடகவலையமைப்பின் சர்வதேச பெண்கள்தின கவியரங்கில் தலைமைதாங்குவதற்கு வருகைதந்திருந்தார் .
அவரை நிகழ்வின் பிரதமஅதிதி சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனிபா தமிழாஊடகவலையமைப்பின் தலைவர் எஸ்.எம்.ஜலீஸ்  வரவேற்றனர்.
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி தமிழா ஊடகவலையமைப்பு சம்மாந்துறைநகரமண்டபத்தில் இன்று இக்கவியரங்கு நிகழ்வை நடாத்திகொண்டிருக்கிறது.
 தென்கிழக்குபல்கலைக்கழக தமிழ்த்துறைப்பேராசிரியர் றமீஸ்அப்துல்லா நாவலர் ஈழமேகம் பக்கீர்தம்பி நினைவுப்பேருரை ஆற்றினார்.
மகளிர் தினம் தொடர்பில் தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநரி அனுசியா சேனாதிராஜா உரையாற்றினார்.
மாணவ மாணவிகளின் கண்கவர் நிகழ்ச்சிகள் மேடையேறின.