தமிழ் அரசுக் கட்சி – ஜனநாயப் போராளிகள் கட்சிகளுககிடையில் சந்திப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் மாவட்டத்தின் அரசியல் நிலைமைகள் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பிலும் ஆராயும் வகையிலான சந்திப்பொன்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளருக்கும் ஜனநாயப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டப் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு சனிக்கிழமை (02) பகல் மட்டக்களப்பு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இச்சந்திப்பில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளார் கி.துரைராசசிங்கம், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மா.நடராசா, ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு அம்பாறை இணைப்பாளர் என்.நகுலேஸ், மட்டு அம்பாறை ஊடகப் பேச்சாளர் பி.சாந்தன் மற்றும் நிருவாகப் பொறுப்பாளர் என்.தீபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது மாவட்டத்தின் அரசியல் நிலைமைகள் தொடர்பில் பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டதுடன் இரு கட்சிகளுக்குமிடையில் இருக்கின்ற இணக்கப்பாடுகள் தொடர்பிலும், எதிர்கால செயற்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக மக்களால் எதிர்பார்க்கப்படுகின்ற விடயங்கள் தொடர்பில் கரிசினை கொள்வது மற்றும் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வது போன்ற விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.