கித்துல்கல களனி கங்கையில் நீராட சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்

(க.கிஷாந்தன்)

கித்துல்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கித்துல்கல களுகொவ்தென்ன பிரதேசத்தில் களனி கங்கையில் நீராட சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

இச்சம்பவம் 09.02.2019 அன்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தங்கல்ல பகுதியிலிருந்து 18 பேர் கொண்ட தனது நண்பர்களுடன் மற்றும் உறவினர்களுடன் சிவனொளிபாதமலை யாத்திரைக்கு சென்ற போது, வழியில் கித்துல்கல பகுதியில் நீராட சென்ற வேளையிலேயே இவர் இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.

இதன் போது நீராடிக் கொண்டிருக்கும் வேளையில் குறித்த இளைஞன் சுழியொன்றில் அகப்பட்டுள்ளார்.

இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போனாவர் சுவாரபுர பிலியந்தல பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய கவிந்து நிலுபுல் குமார என தெரியவந்துள்ளது.

நீரில் மூழ்கி காணாமல் போன இளைஞனை தேடி கித்துல்கல பொலிஸ் பாதுகாப்பு பிரிவினரும், கடற்படை மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் கித்துல்கல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.