பாதிக்கப்பட்ட வடக்கு பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலைப் புத்தகங்கள், சீருடைக்கான வவுச்சர்கள்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலைப் புத்தகங்கள், சீருடைக்கான வவுச்சர்கள் உரிய வகையில் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது

இதேவேளை மாணவர்களின் தேவைகளைக் கருத்திற்கொண்டு பாடப்புத்தகங்கள் மற்றும் வவுச்சர்களை மீள வழங்கப்படும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டுக்குத் தேவையான பாடசாலைப் புத்தகங்கள், சீருடைக்கான வவுச்சர்கள் விநியோக பணிகள் பூர்த்தியடைந்து வருவதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.