துறைநீலாவணை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.

துறைநீலாவணை மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணம்
இன்று ஞாயிற்றுக்கிழமை பி.ப 03.30 மணியளவில் பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் பாடசாலை அதிபர் ரி.ஸ்பரன் தலைமையில் பாடசாலை ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்ற
நிகழ்வின் போது வழங்கி வைக்கப்பட்டது .

நிகழ்வில் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் உட்பட நிருவாகிகள், பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.