புலி­களின் அர­சியல் பிரி­வே தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு”:

தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பே விடு­தலைப் புலி­களின் அர­சியல் பிரி­வாக செயற்­பட்­டது என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் உதய கம்­மன்­பில தெரி­வித்­துள்ளார். கொழும்பில் நேற்­று­முன்­தினம் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், உதய கம்­மன்­பில, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன், விடு­தலைப் புலி­களின் தலைவர் வேலுப்­பிள்ளை பிர­பா­கரன் மற்றும் அர­சி­யற்­துறை பொறுப்­பாளர் தமிழ்ச் செல்­வ­னுடன் இருக்கும் புகைப்­படம் ஒன்­றையும் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு காண்­பித்­துள்ளார்.

மேலும், யானை – புலி ஒப்­பந்தம் என்று கூறினால், சரி­யாக இருக்கும் என்று நீங்கள் நினைக்­கலாம். 2001 ஆம் ஆண்டு புலி­க­ளுடன் உடன்­ப­டிக்கை ஏற்­ப­டுத்­தப்­பட்­டது. தற்­போது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பு­தானே இருக்­கின்­றது அவர்­களை எப்­படி புலிகள் என்று கூறலாம் என நீங்கள் கரு­தலாம். வேலுப்­பிள்ளை பிர­பா­கரன் கூறி­யது போல் மறந்து போன மக்­க­ளுக்கு நான் நினை­வுப்­ப­டுத்த விரும்­பு­கிறேன்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பே அந்த காலத்தில் விடு­தலைப் புலி­களின் அர­சியல் பிரி­வாக செயற்­பட்­டது. பிர­பா­க­ர­னுடன் சந்­திப்பில் சம்­பந்தன் கலந்­துக்­கொண்டார். உயி­ரி­ழந்த புலி­களின் தலை­வர்­களை நினைவு கூரும் நிகழ்வில் சம்­பந்தன் கலந்­துக்­கொண்டார் என கூறியதோடு,  அந்த நிகழ்வில் புகைப்­ப­டத்தையும் சான்றாகக் காண்பித்துள்ளார்.

அத்­துடன் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு, புலி­களின் அர­சி­யற்­துறை பொறுப்­பாளர் தமிழ்ச் செல்­வனை அடிக்­கடி சந்­தித்து தமது அர­சியல் நட­வ­டிக்­கைகள் தொடர்பில் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யது எமக்கு தெரியும், அன்று விடு­தலைப் புலிகள் அமைப்பின் அர­சியல் பிரி­வாக செயற்­பட்ட தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தற்போது உயிரிழந்த புலிகளின் நோக்கங்களுக்காக செயற்பட்டு வருகிறது என்பதை நாங்கள் மிகவும் தெளிவாக கூறவேண்டும் எனவும்  கம்மன்பில குற்றம் சுமத்தியுள்ளார்.