( வி.ரி.சகாதேவராஜா)
அகில இலங்கை தேசிய மட்ட தமிழ் மொழி தினப்போட்டியில் பிரிவு.5 சிறுகதை ஆக்கத்தில் காரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரியைச் சேர்ந்த மாணவி ரா.மகோற்ஷபி இரண்டாம் இடத்தைப்பெற்று வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றுள்ளார்.
இப் போட்டி கொழும்பு விவேகானந்தா கல்லூரியில் நேற்று நடைபெற்றது.
இவர் கடந்த ஆண்டு இதே போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


