மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட அரசடித்தீவு விக்னேஷ்வரா மகா வித்தியாலய மாணவிகள் இருவர் அகில இலங்கை தமிழ்மொழித்தினப் போட்டியில் வெற்றி பெற்று சாதனையை நிலைநாட்டியுள்ளனர்.
கொழும்பு விவேகானந்த கல்லூரியில் நடைபெற்ற 2025ஆம் ஆண்டிற்கான அகில இலங்கை தமிழ்த்தினப் போட்டியில் பிரிவு 4இல் கவிதையாக்கம் நிகழ்ச்சியில் போட்டியிட்ட தே. திசாந்தனா என்ற மாணவி முதலிடத்தையும், அதே பிரிவில் குறுநாடக ஆக்கம் நிகழ்ச்சியில் அரிகரன் ஸப்தனா என்ற மாணவி முதலிடத்தையும் பெற்று கிழக்கு மாகாணத்திற்கும் பெருமையை ஈட்டிக் கொடுத்துள்ளனர்.
இச்சாதனையை நிலைநாட்டிய மாணவர்களையும் அவர்களை பயிற்றுவித்த பாடசாலை ஆசிரியர், வழிப்படுத்திய அதிபர், ஆலோசனை வழங்கி ஊகுவித்த வலய தமிழ் பாட இணைப்பாளர், கோட்டக் கல்விப் பணிப்பாளர், கல்வி அபிவிருத்தி பிரதிக்கல்விப் பணிப்பாளர், வலயக்கல்விப் பணிப்பாளர், பெற்றோர் ஆகியோருக்கு வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய கல்வி சமூகத்தினர் தெரிவித்துக் கொண்டனர்.





