மட்டக்களப்பு பிராந்தியத்தின் சுகாதார சேவைகளை வலுப்படுத்தும் நோக்குடன், புதிதாக நியமிக்கப்பட்ட 39 வைத்தியர்கள் பணியில் இணைந்துள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr. ஆர். முரளீஸ்வரன் தெரிவித்தார்.
இவர்களுக்கான சேவை நிலையம் குறிப்பிடப்பட்ட நியமன கடிதங்கள் 15.09.2025 அன்று திங்கள் கிழமையன்று வழங்கிவைக்கப்பட்டள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பிரதேச வைத்தியசாலைகளுக்கும் இவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.மாவட்த்திலிருந்து 10ற்கு மேற்பட்ட வைத்தியர்கள் அண்மையில் இடமாற்றம் பெற்று சென்றவேளையில் தற்போது இவர்களுக்கான சேவை நிலையங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இருப்பினும் மாவட்டத்தில் இன்னும் வைத்தியர்களுக்கான தட்டுப்பாடுகள் நிலவுவதாக பிராந்தியப்பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பிராந்தியத்தின் பொறுப்பு மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை சார்ந்த அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
பிராந்திய திட்டமிடல் வைத்திய அதிகாரி Dr. எஸ். தனுஷியா அவர்கள் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இவ் நிகழ்வில். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் புதிய வைத்திய அதிகாரிகளுக்கான மட்டக்களப்பு மாவட்டத்தின் சுகாதார சேவைகள் பற்றிய விரிவான அறிமுகத்தை வழங்கியிருந்தார். மேலும், பிராந்திய பொறுப்பு வைத்திய அதிகாரிகள் தங்களது துறை சார்ந்த விளக்கங்களை அளித்து, புதிய வைத்தியர்களுக்கான பணிகளுக்கு வழிகாட்டுதல் வழங்கினர்.



