இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் பதில் பொதுச் செயலாளர் இன்று (07) காலை யாழ் ஊடக அமையத்தில் அவசர ஊடக சந்திப்பொன்றினை ஏற்பாடு செய்து கருத்து தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கும் போது வடகிழக்கில் உள்ள அதிகமான பிரதேச சபைகளை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றியுள்ளதாகவும் குறிப்பாக 58 உள்ளுராட்சி மன்றங்களின் போட்டியிட்டு சுமார் 40ற்கு மேற்பட்ட உள்ளுராட்சி மன்றங்களில் ஆட்சி அமைக்கும் அதிகாரத்தினை தாம் கைப்பற்றியுள்ளதாகவும் இது பாரிய வெற்றியாகவும் கருத்துரைத்தார்.
யாழ் தேர்தல் மாவட்டத்தில் பாரிய மாற்றம் 6 மாதங்களுக்குள் ஏற்பட்டது வெற்றியாகும். நாடாளுமன்ற தேர்தலில் 25 வீதமான வாக்கினை பெற்ற NPP தமக்கு வெற்றி கிடைத்தாக கருதினார்கள் தற்போது மக்கள் அதனை முறியடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மாற்றம் அரையாண்டுக்குள் மாற்றமாக எமக்கு மாறியுள்ளது இதற்கு காரணம் மக்கள் எப்போதும் எம்மோடுதான் என்பதை நிருபித்துள்ளனர். ஆட்சியமைக்கும் போது ஏனைய தமிழ் கட்சிகளுடனும் இணைந்து ஆட்சியமைப்பது தொடர்பில் ஆராயப்படும் மேலும் எமது உறுப்பினர்களுக்கு சிறந்த முறையில் நிர்வாகம் நடாத்துவதற்கு பயிற்சிகள் வழங்கப்படும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு உடைந்து விட்டதாக கருதினார்கள் அது அவ்வாறு இல்லை தேர்தல் முறையை கருத்தில் கொண்டுதான் இலங்கை தமிழ் அரசுக் கட்சி பிரிந்து கேட்டு ஆட்சியமைக்கலாம் என தீ;ர்மானித்தது அது இந்த தேர்தல் ஊடாக நிருபனமாகியுள்ளது. 6000 ஏக்கர் நிலப்பரப்பை அரசு வர்த்தமானி மூலம் தமதாக்கியுள்ளது. குறித்த வர்த்தமானியை மீழ கைவாங்குமாறு அரசுக்கு வலியுத்தியுள்ளோம் தவறும் பட்சத்தில் பாரிய போரட்டம் மேற்கொள்ளப்படும் இதற்கு அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றினையுமாறு அறைகூவல் விடுத்திருந்தார்.