க.கிஷாந்தன்)
உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (06) காலை 7 மணிக்கு ஆரம்பமாகி தற்போது இடம்பெற்று வருகின்றது.
நுவரெலியா மாவட்டத்தில் இன்று (06) பிற்பகல் 02 மணி வரையான காலப்பகுதியில் 53% சத வீத வாக்கு பதிவு இடம்பெற்றுள்ளதாக தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி தெரிவித்துள்ளார்.
குறிப்பாக மலையகத்தை பொறுத்தவரை பெருந்தோட்ட மக்கள் உட்பட அனைவரும் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று தங்களுடைய வாக்குகளை பயன்படுத்துவதை காணக்கூடியதாக இருக்கின்றது.