திருக்கேதீச்சர நாதர் திருக்கோயில் பரிவார வைரவரின் உற்சவ மூர்த்தி ஸ்தாபன கும்பாபிஷேகம்

( வாஸ் கூஞ்ஞ) 25.04.2025

மன்னார் பாடல் தலமான திருக்கேதீச்சரம் அருள் மிகு கௌரி உடனமர் திருக்கேதீச்சர நாதர் திருக்கோயில் பரிவார வைரவரின் உற்சவ மூர்த்தி ஸ்தாபன கும்பாபிஷேகம் நிகழும் மங்கலகரமான விசுவாவசு வருடம் சித்திரை 17ம் நாள் அதாவது 30.04.2025 புதன் கிழமை காலை 06-53 மணிமுதல் 07-24 மணிவரையுள்ள இடப்பலக்கின சுபமூகூர்த்தத்தில் புதிதாக தாபிக்கப்பட்ட உற்சவமூர்த்தி வைரவப்பெருமானுக்கு கும்பாபிஷேகம் நிகழ்த்தப்பட இருக்கின்றது.

சித்திரை 15ம் நாள் அதாவது 28.04.2025 திங்கட்கிழமை அதிகாலை 05-30 மணிமுதல் விநாயகர் வழிபாடு ஜலாதிவாசம் , தான்யாதிவாசம் , நயலோன்மீலனம் சயநாரோகணம் முதலிய கிரியை வழிபாடுகள் நடைபெறும் எனவும்

சித்திரை 16ம் நாள் அதாவது 29.04.2025 செவ்வாய் கிழமை காலை 08-30 மணிமுதல் பகல் 12 மணிவரை பக்த பெருமக்கள் ‘பால்காப்பு’ சாற்றுதலும் இடம்பெறும் என மன்னார் திருக்கேதீ;ச்சர ஆலய திருப்பணிச்சபை தெரிவித்துள்ளது.