விடுமுறை தொடர்பில் வெளிவரும் தகவல் தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்தி!

ஏப்ரல் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினம் என்று சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல் போலியானது என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், ஏப்ரல் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினம் என இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை.

எனவே, இவ்வாறான போலி தகவல்கள் குறித்து மிகவும் கவனமாக இருக்குமாறு அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஏப்ரல் 15 ஆம் திகதியை பொது விடுமுறையாக அறிவிப்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்று பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க வியாழக்கிழமை (10) பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை அன்று புனித வெள்ளி வருவதால், குறிப்பிட்ட வாரத்தில் வேலை செய்ய மூன்று நாட்கள் மட்டுமே உள்ளன என்றும், எனவே ஏப்ரல் 15 ஆம் திகதி குறித்து இன்னும் குறிப்பிட்ட முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.