( வி.ரி.சகாதேவராஜா)
இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர்கள் நேற்றும் நேற்றுமுன்தினமும் (1)
யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் சென்று
முன்னாள் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மறைந்த சோமசுந்தரம் சேனாதிராஜா( மாவை சேனாதிராஜா) அவர்களின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் மற்றும்
காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச தலைவருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையிலான குழுவினர், அமரர் மாவையின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் திருமதி சேனாதிராஜா மகன் கலையமுதன் உள்ளிட்ட குடும்ப உறவுகளை சந்தித்து அனுதாபங்களைத் தெரிவித்தனர்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனையும் சந்தித்து அளவளாவினர்.