சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்

இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று (18) கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் திருகோணமலை சர்வோதய நிலையத்தில் இடம்பெற்றது.

கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பான பல விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன் உள்ளூராட்சிமன்ற தேர்தல், அரசியல் ரீதியான தீர்வு தொடர்பாகவும், கட்சி சம்மந்தமான வழக்கு அதனை முடிவுறுத்தல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது இது தொடர்பில் முன்னால் பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் ஊடக பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் கருத்துரைக்கையில் voice ……..

இதில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் வடகிழக்கில் தமிழ் அரசு கட்சி சார்பில் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கிளை தலைவர்கள், கட்சியின் செயற்குழு உறுப்பினர்iள், ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.