தம்பலகாமத்திலும் கிளீன் சிறீலங்கா வேலைத் திட்டம் முன்னெடுப்பு!

திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பொலிஸ் நிலையம் மற்றும் தம்பலகாமம் பிரதேச சபை ஆகியண இணைந்து இன்று (17)கிளீன் சிறீலங்கா வேலைத் திட்டத்தை முன்னெடுத்தனர். திருகோணமலை கண்டி பிரதான வீதியின் முள்ளிப்பொத்தானை பகுதி உட்பட பல இடங்கள் சுத்தமாக்கப்பட்டது. பொலிஸார் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் இணைந்து இதனை முன்னெடுத்தனர். புதிய அரசாங்கத்தின் ஒரு திட்டமாக கிளீன் சிறீலங்கா காணப்படுகிறது.
இதில் பிரதேச சபை செயலாளர், பொலிஸ் பொறுப்பதிகாரி என பலரும் கலந்து கொண்டனர்