கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாந்தாமலை பகுதியில் காட்டு யானை இறந்துள்ளது.
மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தாந்தாமலை கிராமத்தின் வயல் பிரதேசத்தை அண்டிய வாய்க்கால் ஒன்றில் காட்டு யானை இன்று (16) இறந்துள்ளது.
இந்த யானையின் இறப்பு தொடர்பில் வெல்லாவெளி, பட்டிப்பளை பிரதேச வனவிலங்கு திணைக்க உத்தியோகத்தர்கள், கொக்கட்டிச்சோலை பொலிஸ் உத்தியோகத்தர்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.