தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் தாம் அடகு வைத்த தங்க ஆபரணங்களை மீட்பதற்காக சென்ற நபரை குறித்த தனியார் நிதி நிறுவனத்தில் கடமையாற்றும் ஊழியர் ஒருவர் தகாத வார்த்தைப் பிரயோகம் செய்து தாக்குவதற்கு முயன்றுள்ளதாக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது….
தமது தேவைகளுக்காக தம்மிடமிருந்த தங்க ஆபரணங்களை களுவாஞ்சிகுடி பகுதியில் அமைந்துள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் 19 இலெட்சம் ரூபாவுக்கு அடகு வைத்திருந்தோம். பின்னர் அதனை மீண்பதற்கு வெள்ளிக்கிழமை(03.01.2025) அன்று ஒரு மணியளவில் நாம் பணத்துடன் உரிய நிறுவனத்திற்குச் சென்று வட்டியும் முதலுமாக கணக்குப் பார்த்தபோது 20 இலெட்சம் ரூபாய் மொத்த தொகையாக கூறினார்கள்.
நாம் 20 லெட்சம் ரூபாய் காசு கொண்டு வந்துள்ளோம் எமது நகைகளை தருமாறு கோரினோம். இப்போது உங்களது நகைகள் தரமுடியாது ஏன் அவசரமாக மீட்கப் போகின்றீர்கள் இன்னும் இரு நாட்களுக்கு இருக்கட்டும் திங்கட்கிழமை தருகின்றோம் என கூறினர். இல்லை எமக்கு அவசரமாக எமது ஆபரணங்ளை தேவை, உங்களுடைய வட்டியும் முதலுமாக கொண்டு வந்திருக்கின்றோம் என கூறியும் அவர்கள் எமது நகைகளை தர மறுத்துவிட்டார்கள். பின்னர் நாம் எமதுவீட்டிற்கு சென்றுவிட்டோம்.
மீண்டும் அன்றயதினம் 2 மணியளவில் போய் நாம் தங்களிடம் அடகு வைத்த ஆபரணங்களை மீட்பதற்காக வந்துள்ளோம் எம்மிடமுள்ள நிதியை தாங்கள் பெற்று விட்டு எமது ஆபரணங்களை தருமாறு கோரியபோதும் அந்த நிதி நிறுவனத்தில் கடமைபுரியும் உத்தியோகஸ்த்தர் ஒருவர் தகாத வார்த்தைப்பிரயோகம் செய்து எம்மைத் தாக்க முயன்றார்.
இவ்விடையம் தொடர்பில் நாம் களுவாஞ்சிகுடி பொலிவில் முறைப்பாடு செய்துள்ளோம். என குறித்த நபர் தெரிவித்துள்ளார்.
அக்குறித்த நிதி நிறுவனத்தில் கடையாற்றும் உத்தியோகஸ்த்தர்கள் தமக்கு மாத்திரமின்றி இன்னும் பல மக்களுக்கு இவ்வாறு செய்துள்ளதாகவும், எம்முடைய தங்க நகைகள் அவர்களிடத்தில் இன்னும் சில நாட்களுக்கு இருக்குமாக இருந்தால் வட்டிக் காசு அதிகரிக்கும் என்ன நோக்கத்தியேதான் அவர்கள் இவ்வாறு செய்து வருவதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.